Tuesday 8 January 2013

நான் படித்ததில் பிடித்த என்றும் அழியாத பொன்மொழிகள்


                             நான்  படித்தில் பிடித்த என்றும் அழியாத பொன்மொழிகள்
Ø  உண்மைக்காக எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.
Ø  இன்பங்கள் சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை.
Ø  ஒரு பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும்.
Ø  அறிவும், ஆராய்ச்சியும் எல்லையற்றவை.
Ø  எத்தனை கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும்.
Ø  தன் குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவன் முட்டாள்.
Ø  கோபம் வேண்டாமே. அது தடுமாற்றத்தில் ஆரம்பித்து, மன வருத்தத்தில் போய் முடியும்.
Ø  நடந்தவைகளைப் பற்றி நினைக்காமல் இருந்தாலே நடப்பனவற்றில் பிரச்சனை வராமல் இருக்கும்.
Ø  வேகமாக முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை தரும்.
Ø  தன்னைச் சீர்ப்படுத்தாதவன், பிறரை சீர் படுத்த முடியாது.
Ø  கர்வம் படைத்தவன் கல்லுக்குச் சமமானவன்.
Ø  பகையில்லாதவன் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
Ø  அற்ப ஆசைகள் ஆயிரம் முயற்சிகளைக் கெடுக்கும், கோடி தவத்தையும் கெடுக்கும்.
Ø  வெறும் வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது.
Ø  மரணத்தைக் காட்டிலும் கொடியது வஞ்சகம்.
Ø  பாவத்தை யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.
Ø  திருப்தி அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.
Ø  ஆசைகளுக்குச் சமமான நெருப்பு எதுவுமில்லை.
Ø  உபதேசம் என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
Ø  பேராசை உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.
Ø  தாய், தந்தையை விட சிறந்த, உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை.