நான் படித்தில்
பிடித்த என்றும் அழியாத பொன்மொழிகள்
Ø
உண்மைக்காக
எதையும் இழக்கலாமே ஒழிய,எதற்காகவும் உண்மையை இழக்கக்கூடாது.
Ø
இன்பங்கள்
சேர்ந்து வருவதில்லை, துன்பங்கள் தனியாகவும் வருவதில்லை.
Ø
ஒரு
பொய்யை உண்மையாக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும்.
Ø
அறிவும்,
ஆராய்ச்சியும் எல்லையற்றவை.
Ø
எத்தனை
கற்றாலும், அனுபவம் மட்டுமே அறிவைத்தரும்.
Ø
தன்
குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவன் முட்டாள்.
Ø
கோபம்
வேண்டாமே. அது தடுமாற்றத்தில் ஆரம்பித்து, மன வருத்தத்தில் போய் முடியும்.
Ø
நடந்தவைகளைப்
பற்றி நினைக்காமல் இருந்தாலே நடப்பனவற்றில் பிரச்சனை வராமல் இருக்கும்.
Ø
வேகமாக
முடிவெடுப்பதை விட, விவேகமாக முடிவெடுப்பதே நன்மை தரும்.
Ø
தன்னைச்
சீர்ப்படுத்தாதவன், பிறரை சீர் படுத்த முடியாது.
Ø
கர்வம்
படைத்தவன் கல்லுக்குச் சமமானவன்.
Ø
பகையில்லாதவன்
மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்.
Ø
அற்ப
ஆசைகள் ஆயிரம் முயற்சிகளைக் கெடுக்கும், கோடி தவத்தையும் கெடுக்கும்.
Ø
வெறும்
வார்த்தைகளால் வயிற்றை நிரப்ப முடியாது.
Ø
மரணத்தைக்
காட்டிலும் கொடியது வஞ்சகம்.
Ø
பாவத்தை
யார் செய்தாலும் அது அவரது மரணம் வரை முள்ளாய்க் குத்தும்.
Ø
திருப்தி
அடையாதவன் என்றும் வறுமையிலேயே இருப்பான்.
Ø
ஆசைகளுக்குச்
சமமான நெருப்பு எதுவுமில்லை.
Ø
உபதேசம்
என்பது கூட்டத்தில் மட்டுமே எடுபடும்.
Ø
பேராசை
உள்ளவன் உலகம் முழுவதையும் கொடுத்தாலும் திருப்தி அடையமாட்டான்.
Ø
தாய்,
தந்தையை விட சிறந்த, உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை.